திருவண்ணாமலை: காதல் திருமணம் செய்த மருமகனை வெட்டி கொலை முயற்சி செய்த மாமனார்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர் செங்கம் பெங்களூர் ரோட்டில் இயங்கி வரும் வெங்கடேஷ்வரா பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த காளி கோயில் பூசாரி மகளான ஜெயஸ்ரீ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலில் முடிவடைந்துள்ளது.
இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், பதிவு திருமணமாக செய்து தனி குடித்தனம் நடத்தி வந்தனர். தற்போது ஜெயஸ்ரீ மூன்று மாத கர்ப்பிணையாக இருந்து வருகிறார். தனது விருப்பம் இல்லாமல் மகள் காதல் திருமணம் செய்தது பூசாரி ஜானகிராமனுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது.இந்த நிலையில் காதல் திருமணத்தை எதிர்த்து வந்த பூசாரி ஜானகிராமன் தனது மருமகனான விஜி என்பவரை கொலை செய்ய தனது கோவிலுக்கு வரும் இளைஞர்களான சிவா, திருமலை, மதி, ஆகியோரை தனது மகன் ராஜேஷ் உதவியுடன் கூலிப்படையாக தயார் செய்து கொலை செய்ய சில நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு விஜி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜியை சரமாரியாக வெட்டி உள்ளனர். மேலும் தடுக்கச் சென்ற அவருடன் பணியாற்றிய அரவிந்த்சாமி என்பவரையும் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.ரத்த வெள்ளத்தில் சாய்ந்த விஜியை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த அரவிந்த்சாமி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க் கைப்பற்றி அதன் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
குற்றம் நடந்த 12 மணி நேரத்தில் மாமனார் பூசாரி ஜானகிராமன் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாமனாரே மருமகனை கொலை செய்ய திட்டமிட்ட இச்சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments