• Breaking News

    கும்மிடிப்பூண்டி அருகே குமரன்நாயக்கன் பேட்டை அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலின் 19ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது


    கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமரன்நாயக்கன் பேட்டையில் உள்ள அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் 19ஆம் ஆண்டு ஸ்ரீ நவச்சண்டியாகம் மற்றும் தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்வை ஒட்டி வெள்ளிக்கிழமை தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை கணபதி ஹோமம், நவச்சண்டியாக பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ண லீலா தெருக்கூத்து நடைபெற்றது.கும்பாபிஷேக தினமான ஞாயிற்றுக்கிழமை நவச்சண்டியாக பூஜை, கலச அபிஷேகம் நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் 800 பேர் வேப்பிலை அணிந்து நாவேல் தரித்து ஆலயத்தை வலம் வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக தீக்குழியில் இறங்கினர்.

    இந்த தீமிதி திருவிழாவை காண முன்னாள்நாடளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணு கோபால்,ஒன்றிய குழு தலைவர் கே.எம். எஸ். சிவக்குமார்,ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதர், பாரதிய ஜனதா பாடியநல்லூர் வெங்கடேசன்  உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

    தொடர்ந்து வெக்காளியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தீமிதி விழாவிற்கான ,வெக்காளியம்மன் கோவில் நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், பாபு மற்றும் நிர்வாக அதிகாரி சுதாகர் உள்ளிட்டோர் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.

    தீமிதி திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கும்முடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது அனைத்து பக்தர்களுக்கும் மூன்று வேலை உணவு வழங்கப்பட்டது.

    No comments