மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கு சேர் பின்னுதல், மெழுகுவர்த்தி, அகர்பத்தி தயாரித்தல் பயிற்சி விஜயகீதம் அறக்கட்டளை சார்பில் கற்றுத்தரப்படுகிறது - MAKKAL NERAM

Breaking

Wednesday, July 24, 2024

மாற்று திறன் கொண்ட குழந்தைகளுக்கு சேர் பின்னுதல், மெழுகுவர்த்தி, அகர்பத்தி தயாரித்தல் பயிற்சி விஜயகீதம் அறக்கட்டளை சார்பில் கற்றுத்தரப்படுகிறது


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மூகாம்பிகை நகரில் உள்ள சிறப்பு குழந்தைகள் மையத்தில் உள்ள குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தும் விதமாக, அவர்களுக்கு விஜயகீதம் அறக்கட்டளை சார்பில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டது.விஜயகீதம் அறக்கட்டளை நிறுவனர் கீதா, தொழிற்பயிற்சியை தொடங்கி வைத்தார்.மாணவர்களின் திறன் மேம்படவும், நிறைவாற்றலை பெருக்கும் விதமாக முதலாவதாக ஒயர் சேர் பின்னும் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.3 மாத கால பயிற்சிக்கு பின் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும், மெழுகுவர்த்தி தயாரித்தல், அகர்பத்தி தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment