40 சி.ஆர்.பி.எப் வீரர்களை பலி வாங்கிய புல்வாமா பயங்கரவாதி மாரடைப்பில் பலி
கடந்த 2019ல் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 2,547 துணை ராணுவப் படை வீரர்களுடன் 78 ராணுவ வாகனங்கள் வரிசையாக சென்றன. அவை, புல்வாமா பகுதியில் சென்றபோது, வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஒரு கார் மோதிய வேகத்தில், ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து வெடித்துச் சிதறியது.
இதில், 40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் - இ - முகமது பொறுப்பேற்றது. இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் நிலையில் இதுவரை 19 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், ஹாஜிபல் கிராமத்தைச் சேர்ந்த பிலால் அகமது குச்சே, 32, என்பவரும் கைது செய்யப்பட்டு, கிஷ்த்வார் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.
No comments