குழந்தை திருமணம் செய்தவர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கைது - MAKKAL NERAM

Breaking

Sunday, November 17, 2024

குழந்தை திருமணம் செய்தவர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கைது

 


சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகில் சிறுவாச்சூர் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரன். இவருக்கு குமரேசன் (30) என்ற மகன் உள்ளார். குமரேசன் சரக்கு லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தாலுகாவை சேர்ந்த மலை வேப்பன் குட்டை கிராமத்தில் வசிக்கும் ஒரு சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து அவருடன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

குமரேசனுக்கும் அந்த சிறுமிக்கும் யாரும் அறியாத வண்ணம் திருமணம் நடந்துள்ளது. ஊர்க்காரர்கள் யாருக்கும் தெரியாமல் குமரேசன் அந்த சிறுமியோடு குடும்பம் நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே கருத்தரித்த அந்த சிறுமியை சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு குமரேசன் அழைத்து சென்றுள்ளார்.

அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு 17 வயது என்பதால் உடனே அருகில் உள்ள அரசு மகளிர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் குமரேசனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இது குழந்தை திருமணம் என்பதால் குமரேசன் உட்பட உடன் இருந்த ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment