குடும்ப தகராறு..... பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தாய் - MAKKAL NERAM

Breaking

Friday, December 13, 2024

குடும்ப தகராறு..... பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தாய்

 


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமன்பட்டியில் சந்திரன்-ரஞ்சிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கீர்த்தி(4), சங்கீதா(3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் ரஞ்சிதா கீழபூங்கொடி அய்யனார் கோவில் அருகில் இருக்கும் கிணற்றில் தனது குழந்தைகளை தள்ளி கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரஞ்சிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment