காரைக்குடி: அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - MAKKAL NERAM

Breaking

Friday, January 24, 2025

காரைக்குடி: அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு


 சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் ஒரு அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சக்தி சோமையா என்ற 15 வயது மாணவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த மாணவன் என்று பள்ளியில் கம்ப்யூட்டர் ஒயரை பிளக்கில் சொருகிய போது திடீரென மின்சாரம் பாய்ந்து தீக்காயத்திற்கு ஆளானான்.

மாணவனை உடனடியாக மீட்டு  மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டான். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

No comments:

Post a Comment