கன்னியாகுமரி படகு போக்குவரத்து..... முக்கிய அறிவிப்பு வெளியிட்ட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, January 14, 2025

கன்னியாகுமரி படகு போக்குவரத்து..... முக்கிய அறிவிப்பு வெளியிட்ட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம்

 


பொங்கல் பண்டிகையையொட்டு தொடர் விடுமுறை தினங்கள் என்பதால் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கன்னியாகுமரி கடற்கரையில் நாளை ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்களிலும் படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் காலை 8 மணி முதல் நாள் 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் படகு போக்குவரத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடைபெறும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment