உலகை உலுக்கும் உளநெறிப் பணியில் உச்சத்தைத் தொட்ட தமிழ்த்தாய் மகள் டாக்டர் ஷீபா லூர்தஸ்
மிகப்பெரும் எழுத்தாளர், தொழில்நுட்ப நிபுணர் மற்றும் பரதநாட்டியக் கலைஞரான டாக்டர் ஷீபா லூர்தஸ், துபாயில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சாவால் வழங்கப்பட்ட " சிறந்த உலக மனிதாபிமான அடையாள விருது " பெற்றார். குழந்தைகள் புற்றுநோய் நிவாரணத்திற்காக இருபது மொழிகளில் எழுதப்பட்ட 250 நூல்களை மதித்து, மேரிலாந்து சர்வதேச பல்கலைக்கழகம் அவருக்கு " இலக்கியத் தத்துவத்தில் கௌரவ டாக்டரேட் " பட்டம் வழங்கியது. இந்த மாநாட்டில் டாக்டர் ஷீபா வழங்கிய " திடமான எதிர்காலத்திற்கான பசுமை உலகத்தை நோக்கிய புதுமையும் திட்டங்களும்" என்ற தலைப்பிலான உரை பெரும் பாராட்டுகளைப் பெற்றது. மனிதாபிமானத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இவரது சாதனைகள் உலகளாவியரீதியில் பெருமையாக கருதப்படுகின்றன.
No comments