• Breaking News

    வாயலூர் கிராமத்தில் ஆதிமுனி ஆன்மீகப் பேரவை அறக்கட்டளையின் சார்பில் 17 ஆம் ஆண்டு சித்தர்கள் கூடும் சித்திரை திருவிழா

     


    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வாயலூர் கிராமத்தில் ஆதிமுனி ஆன்மீகப் பேரவை அறக்கட்டளையின் சார்பில் 17 ஆம் ஆண்டு சித்தர்கள் கூடும் சித்திரை திருவிழா ஆதிமுனி ஆலய வளாகத்தில் நடைபெற்றது, விழாவிற்கு ஆன்மீக தந்தை ஓம் சக்தி குங்கும சித்தர், தர்ம ஆச்சார்யா அண்ணாமலை சித்தர் உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர். 

    ஆதிமுனி ஆன்மீக பேரவை அறக்கட்டளையின் செயலாளர் கருணாநிதி, பொருளாளர் ராஜேந்திரன்,துணை செயலாளர் சாதுசிவலதா ஜி, ஒருங்கிணைப்பாளர் பூபதி ராஜ், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், திருவிழாவின் முக்கிய நிகழ்வான கரு முனீஸ்வரர் மஹா யாக வேள்வியை ஸ்ரீராம் ஜி,ஹரிஹரன் ஐயா ,அகோரி மணி, உள்ளிட்டவர்கள் பங்கு பெற்று கரு முனீஸ்வரருக்கு கணபதி பூஜை,புனித தீர்த்த பூஜை, சிறப்பு அலங்காரம், மகா தீப ஆராதனை, அன்னதானம், வஸ்திரதானம் மற்றும் ருத்ராட்சம் வழங்குதல், என பல்வேறு சிறப்பு பூஜைகளை நடத்தினர்கள்.

    அதனைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவாற்ற இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சித்தர்களை வரவேற்று வாழ்த்தி பேசினர் நிகழ்ச்சியின் முன்னதாக காஷ்மீர் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி ஏறெடுக்கப்பட்டது, பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திரளான சிவனடி சித்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிழாவினை சிறப்பித்தனர், விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் ஆதிமுனி ஆன்மீகப் பேரவை அறக்கட்டளையின் நிறுவனர் நாகா கருமுனி ஆசான் , லதா வெங்கடேசன்,மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.

    No comments