அகில இந்திய கட்டுநர்,வல்லுநர் சங்கம் சார்பில் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட முடிச்சூர் ரோடு கிருஷ்ணா நகர் பகுதியில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் சார்பில் தலைவர் ராபர்ட் லிவிங்ஸ்டன், துணைத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் ராஜசேகர், துணைச் செயலாளர் தினேஷ் குமார், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், தாம்பரம் மாநகராட்சி 53வது மாமன்ற உறுப்பினர் டி.ஆர்.கோபி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவங்கி வைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் கேப் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நல சங்கம் தலைவர் விஜயகுமார், நாகராஜன், லாவா குமார், வில்சன் ராஜ், சுரேஷ், பெஞ்சமின் ராஜன் மற்றும் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் நிர்வாகிகள் தொழிலாளர்கள் நல சங்கம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments