ஆடு திருட வந்த 2 பேரை அடித்துக்கொன்ற கிராம மக்கள்
சிவகங்கை மாவட்டம் திருமலையில் சுப்பு என்பவர் தோட்டத்தில் ஆடு, கோழி வளர்த்து வந்தார். இந்நிலையில், அவரது தோட்டத்தில் உள்ள ஆடு, கோழியை திருட இன்று அதிகாலை மணிகண்டன், சிவசங்கரன் என்ற 2 பேர் வந்துள்ளனர்.
அப்போது, அங்கிருந்த கிராம மக்கள் சிலர் 2 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் மணிகண்டன், சிவசங்கரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து வந்து 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments