• Breaking News

    2- வது திருமணத்திற்கு தயாரான கணவனை மண்டபத்திற்குள் புகுந்து வெளுத்தெடுத்த மனைவி

     


    கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் தனுஜா(30), சிக்கமகளூரூ மாவட்டத்திலுள்ள பகுதியில் கார்த்திக் நாயக்(32) ஆகிய இருவரும் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே வரதட்சனை கேட்டு மனைவியை கார்த்திக் துன்புறுத்தியுள்ளார். கணவரின் தொந்தரவை தாங்க முடியாத தனுஜா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின் அவர் பணம் வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

    இதனால் திருப்தி அடையாத கணவன் மேலும் பணம் வேண்டும் என்று தொந்தரவு செய்துள்ளார். மனைவி தனது வீட்டில் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் வரதட்சணைக்காக இரண்டாம் திருமணம் செய்து கொள்வதற்காக கணவன் முடிவு செய்தார். அதன்படி தான் ஊருக்கு செல்வதாக சென்று திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். இதையடுத்து சித்ரதுர்கா நகரில் உள்ள காயத்ரி மண்டபத்தில் திருமணம் நிகழ்ச்சி நடைபெற்று வந்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மனைவி தன் பெற்றோருடன் திருமண மண்டபத்துக்கு வந்து தனக்கு துரோகம் செய்த கணவனின் சட்டையைப் பிடித்து காலணியால் அடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மணப்பெண்ணின் குடும்பத்தினரும் அவரை அடித்ததோடு திருமணத்தையும் நிறுத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சூழ்நிலையை சரி செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments