• Breaking News

    பஞ்சட்டி ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா..... மாவட்ட ஆட்சியர்,அமைச்சர்,எம்எல்ஏ பங்கேற்பு.....


    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி ஊராட்சியில்  கிராம பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சேகர் தனது மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பஞ்செட்டி ஊராட்சியில் சமுதாய கூட கட்டிடம் கட்ட பூமி பூஜை நேற்று நடைபெற்றது இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார். பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர்   முன்னிலை வகித்தார் . 

    சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறுபான்மை  நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு நாசர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நடந்த பூமி பூஜை நிகழ்ச்சியில்  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ்.,மாவட்ட அவைத் தலைவர் பகலவன், மாவட்ட நிர்வாகிகள் மூர்த்தி, உமா மகேஸ்வரி,  கதிரவன்,, ஒன்றிய பொறுப்பாளர் ஞாயிறு ஆனந்த் குமார்,முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் தமிழரசன், லோகேஷ் ,தீபன் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் ராஜவேலு, சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தினி, காளியம்மாள், திமுக மாவட்ட ,ஒன்றிய பொறுப்பாளர்  முரளிதரன்  கோளூர் ஜெயசித்ரா சிவராஜ் கதிரவன் யுவராஜ் ஒப்பந்தக்காரர் மோகன் ஒன்றிய பொறுப்பாளர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டார தலைவர்கள் ஜெயசீலன், அத்திப்பட்டு புருஷோத்தமன் மீஞ்சூர் வினோத் மணிகண்டன், பாலாஜி ஆமூர் சந்திரன், நவீன் பிரபு.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    No comments