• Breaking News

    நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவ ஆலோசனை முகாமை துவக்கி வைத்தார்


    ஈரோடு மாவட்டம் , நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் ரேவதி மெடிக்கல் சென்டர் & அறக்கட்டளை திருப்பூர் மற்றும் IDFC FIRST BHARATH கரட்டடிபாளையம் இனைந்து நடத்தும் பொதுமக்கள் நலன் காக்க இதயம் காப்போம் பேருந்து திட்டம் சார்பாக மாபெரும் இலவச இருதய பரிசோதனை & பொது மருத்துவ ஆலோசனை முகாம் எலத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில்  நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நம்பியூர் ஒன்றியம் சார்பாக நம்பியூர் ஒன்றிய செயலாளர் சின்னச்சாமி நாடார் தலைமையில் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் நாடார் முன்னிலையில்  நடைபெற்றது.


     இந்நிகழ்ச்சியில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார்  கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் சுப்ரமணியம் நாடார் கலை நாடார், சரவணன் நாடார், கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பொன்மணி நாடார்,ஈரோடு மேற்கு மாவட்ட துணைத் தலைவர்  சாரதி நாடார், மாவட்ட கொ ப செ யுவராஜ் நாடார் முக்கிய ஆலோசகர்கள் பெரியசாமி நாடார், லட்சுமண குட்டி நாடார் ஊர் மூப்பர் துரைசாமி  மற்றும் மகளிர் அணி  ரேணுகாதேவி பூங்கொடி, பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை காந்திமதி ,  அதிமுக பிரமுகர்கள் கிருஷ்ணன் நாடார்& கதிர்வேல் நாடார் திமுக பிரமுகர் கேப்டன் சங்கர்  ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர். 


    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .






    No comments