• Breaking News

    நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்


     நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி முதல் 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. பருவமழை மற்றும் பல்வேறு காரணங்களால் அதே மாதம் 23-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், 'சுபம்' என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது.

    இருநாட்டு பயணிகளின் ஆர்வத்தால் சனிக்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் இருமார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடல் சீற்றம் காரணமாக இன்று முதல் வரும் 17-ந் தேதி வரை நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், 18-ந் தேதி முதல் வழக்கம்போல் போக்குவரத்து நடைபெறும் என்றும் பயணிகள் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    No comments