• Breaking News

    நம்பியூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில் குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்


    ஈரோடு வடக்கு மாவட்டம், நம்பியூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் 102 - வது பிறந்தநாள் விழா முன்னிட்டு நம்பியூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளரும் , நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல்.ப.செந்தில்குமார்  தலைமையில் எம்மாம்பூண்டி ஊராட்சி, எம்மாம்பூண்டி கிளைக் கழகத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 

     எம்மாம்பூண்டி, அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.நம்பியூர் பேரூராட்சி 11 - வது வார்டு பிலியம்பாளையம் பகுதியில்  கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நம்பியூர், அரசு சமுக வட்டார சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்வின் போது ஒன்றிய  துணை செயலாளர்கள் பி. வேலுச்சாமி , சி.பெரியசாமி , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் எஸ்.எஸ் (எ) சண்முகசுந்தரம் , மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தமிழ்மணி குமாரசாமி ,  மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் எஸ். விஜயகுமார் , மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.எஸ் பழனிச்சாமி , மாவட்ட பிரதிநிதி வே.ச.கார்த்திக் பிரபு , ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எம்.எம்.ராஜ்குமார் , கழக மூத்த முன்னோடி முனியக்காரர் (எ) ராமசாமி , ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் தம்பியண்ணன் (எ) சென்னியப்பன் , கிளைக் கழகச் செயலாளர்கள் பெரியசாமி , ரகு , கனகரத்தினம் , ஜெயக்குமார் , கோவிந்தன் , தனசேகரன் , அம்மாசைக்குட்டி ,    இளைஞர் அணி கார்த்தி , நம்பியூர் பேரூர் கழக வார்டு செயலாளர்கள் எஸ்.பி.வரதராஜ் , தேங்காய் குமார் , கணேசன் , நம்பியூர் பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கலைஞர் கதிரேசன் , மாணவரணி பிலியம்பாளையம் கருப்புசாமி , சுண்டக்கம்பாளையம் முருகேசன் , வசந்தம் மளிகை ஆறுமுகம்  மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர். 


    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.




    No comments