சங்கராபாளையம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், சங்கரா பாளையம் ஊராட்சி , சங்கராபாளையம் பகுதியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 8.40 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்க அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார் .
இந்நிகழ்ச்சியில் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் , உதவி செயற்பொறியாளர் ரமேஷ் , ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கவின் பிரசாத் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குருசாமி , சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments