சிறுபுழல்பேட்டை அருள்மிகு ஸ்ரீ ஆலயத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம்,சிறுபுழல் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆலயத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. யாக கலச பூஜைகளுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கலச நீரானது கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கும் ஆலயத்தம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்களின் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை ஓம் சக்தி பராசக்தி கோஷங்களுடன் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
No comments