தமிழக மீனவர்கள் 10 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்..... இலங்கை நீதிமன்றம் உத்தரவு...... மீனவர்கள் அதிர்ச்சி - MAKKAL NERAM

Breaking

Tuesday, September 2, 2025

தமிழக மீனவர்கள் 10 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்..... இலங்கை நீதிமன்றம் உத்தரவு...... மீனவர்கள் அதிர்ச்சி


 ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 7-ந்தேதி விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 10 பேரும் வழக்கு விசாரணைக்காக நீர்க்கொழும்பு அருகே உள்ள வெளிச்சுரா கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.


அப்போது நீதிபதி, 10 மீனவர்களுக்கும் இலங்கை பணம் தலா ரூ.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை கட்டத்தவறினால் 18 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து 10 மீனவர்களும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.


இலங்கை பணம் தலா ரூ.5 கோடி அபராதம் என்பது, இந்திய மதிப்பில் தலா ரூ.1 கோடியே 46 லட்சம் என்பதாகும்.இவ்வளவு அதிகமான தொகையை பாம்பன் மீனவர்களுக்கு அபராதமாக இலங்கை கோர்ட்டு விதித்தது, அவர்களுடைய குடும்பத்தினருக்கு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.


எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கோர்ட்டு விதித்த அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்டுக்கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment