திருநெல்வேலி: கொலை வழக்கில் தலைமறைவான 2 வாலிபர்கள் கைது

 


திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு கொலை வழக்கில் ஈடுபட்ட தென்திருப்புவனத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 25) மற்றும் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(எ) செல்வம்(22) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்.

மேற்சொன்ன 2 பேரும் நீதிமன்ற விசாரணைக்கு ஒன்றரை (1½) மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவர்கள் 2 பேருக்கும் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேற்சொன்ன 2 பேரையும், முக்கூடல் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Post a Comment

0 Comments