புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2025–2026 ஆம் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் “பாராட்டு விழா” நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்.தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தலைமையில் அரசு பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கும் நிகழ்வை மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தலைமையேற்று, சிறப்பித்து சான்றிதழ்கள் வழங்கினார்.




0 Comments