கும்மிடிப்பூண்டி அருகே ஸ்ரீ ஜடராயர் ஆலயம் மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய திருக்கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

 


 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  வட்டம்  தம்புரெட்டிப்பாளையம்,இராகவரெட்டிமேடு கிராமம்,கம்மவர்பாளையம்  கிராம பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அருள்மிகு ஸ்ரீ  ஜடராயர் ஆலயம் மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில்  புனரமைக்கப்பட்ட இந்த திருக்கோவிலில்  கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைநடைபெற்றது.



முன்னதாக விழாவையொட்டி கடந்த 24 ம் தேதி பந்தல்கல் உடன் துவங்கப்பட்ட நிகழ்ச்சியில்  யாகசாலை அமைத்து யாக பூஜைகள், கணபதி ஹோமம், அனுக்கை பூஜை, நவக்கிரக ஹோமம், கோபூஜை, லட்சுமி குபேர பூஜை,தனதான்ய பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி,   முதலாம் கால யாக பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜை, மங்கல இசை,   சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது பக்தர்கள் மனம் உருகி   அம்மனை வழிபட்டனர் தொடர்ந்து  கோவில் நிர்வாகம் சார்பில்அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது இரவு இன்னிசை கச்சேரி நடைபெற்றது.



Post a Comment

0 Comments