சாக்லெட் கொடுத்து 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - MAKKAL NERAM

Breaking

Sunday, December 25, 2022

சாக்லெட் கொடுத்து 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

 

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் வாடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த தம்பதியின் 10 வயது குழந்தை வீட்டின் அருகே உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது, அந்த கடை அருகே நின்றுகொண்டிருந்த நபர் அந்த சிறுமியிடம் சாக்லெட் கொடுத்துள்ளார். அந்த சாக்லெட்டை சிறுமி வாங்கியதும் அந்த சிறுமியை அவர் மறைவான இடத்திற்கு அலைத்து சென்றுள்ளார். பின்னர், அந்த சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்றுள்ளனர். இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment