அறந்தாங்கி அருகே தேடாக்கி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தேடாக்கி கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், கருப்பர், காட்டேரிஅம்மன் உள்ளிட்ட திருக்கோயில்கள் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் செய்வதன அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டு கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த 27-ந் தேதி முதல் காலையாக பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய நாளான இன்று ஆறாம் காலயாக பூஜை சிறப்பாக முடிவுற்று கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
கரம்புறப்பாடானது மேளதாளங்களுடன் கோயிலை சுற்றி வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. பாலாமணி சிவாச்சாரியார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் தேடாக்கி, கொக்குமடை,ஏகனிவயல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நாகுடிபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments