தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
விருதுநகர் அருகே ஆமத்தூரில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்து விபத்து இல்லாமல் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் தயாரிப்பது குறித்து விளக்க முகாம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் வெடி விபத்து என்பது பெரும்பாலும் மனி தவறுகளால் தான் நடக்கிறது என்றும் அதனை தவிர்க்க வேண்டும் எனவும் அவ்வாறு வெடி விபத்தினால் ஏற்படும் உயிர்ச் சேதங்கள் மற்றும் விளைவுகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை எனவும்,ஆகையால் விபத்து இல்லாமல் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் உற்பத்தி செய்வது எவ்வாறு என்பதை இந்த பயிற்சியின் மூலம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இப்ப பயிற்சியினை அனைவரும் பின்பற்றி பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்திகள் செய்ய வேண்டும் என கூறினார்.
இப்பயிற்சியினால் விபத்துக்களை தவிர்ப்பதற்காகத்தான் இந்த பயிற்சி எனவும் பயிற்சியில் சொல்லிக் கொடுக்கப்படும் செயல்களை அனைத்து தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கையாகவும் வைக்கிறேன் எனக் கூறி உரையாற்றினார் பின்னர் பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியின் போது ஏற்படும் விபத்தினை தவிர்ப்பது எப்படி என்பதனை வீடியோ காட்சியினை பட்டாசு தொழிலாளர் உடன் அமர்ந்து பயிற்சி விளக்க கண்காட்சி கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கண்டு களித்தார்.பின்னர் பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் மக்களுக்கு பயிற்சி கையேட்டினையும் வழங்கினார்.
No comments