விளாத்திகுளம் அருகே ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடத்தை சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் 7,லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய நலக்கூட கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்ண்டேயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மத்திய ஒன்றிய செயலாளர்  ராமசுப்பு,வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன்,இம்மானுவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் முனீஸ்வரி,பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments