மகனுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தாய் வேகத்தடையில் தூக்கிவீசப்பட்டு பரிதாப பலி

 

தேனி மாவட்டம் போடி அருகே குப்பி நாயக்கன்பட்டி சேர்ந்த கருப்பையா மகன் தீபக்குமார் (.35) இவர் தனது தாயார் அம்சவல்லி (40) என்பவருடன் போடியிலிருந்து பெரியகுளம் நோக்கி ஒரு கருமாதி விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்த பொழுது பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடுப்பின் மீது கவனக்குறைவாக ஏறியதில் தாய் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மகன் படுகாயங்களுடன் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பெரியகுளம் தென்கரை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Post a Comment

0 Comments