உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் அவுரித்திடலில் நடைப்பெற்றது


உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் வலிமை மற்றும் எழுச்சியின் அடையாளம் என்ற தலைப்பில் நாகை மாவட்டம் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.

பேரணியை விமன் இந்தியா மூவ்மெண்ட்  மாவட்ட தலைவர் பஷீரா கனி  கொடியசைத்து துவங்கி வைத்தார். பேரணியானது காந்தி சிலையில் துவங்கி புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது.

அவுரித்திடலில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாவட்டத் துணைத் தலைவர் சையது சுல்தான் பீவி  வரவேற்புரை ஆற்றினார்.

விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுலைஹா மற்றும் எஸ் டி பி ஐ கட்சியின் மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் திட்டச்சேரி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நஸ்ரின் பானு,எஸ் டி பி ஐ கட்சி நாகூர் நகரத்தலைவர் கதீஜா மற்றும் , நாகூர் ஆண்டவர் நர்சரி & பிரைமைரி ஸ்கூல் முதல்வர் சரிதா ஆகியோர்கள் முன்னிலை வகிக்க வின் இந்தியாஅமைப்பின் மாவட்ட பொதுச்செயலாளர் நஸ்ரின் பேகம் தலைமை உரையாற்றினார்.

இப்பிரச்சாரத்தை வின் இந்தியா அமைப்பின் நாகை கிளை தலைவர் பாத்திமா பீவி தொகுப்புரை வழங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஸ் பாத்திமா நன்றி உரை நிகழ்த்தினார்.


இந்த பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நாகை மாவட்டத்தின் பல பகுதியிலிருந்து பெண்கள்ஏராமானோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments