தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஈரோடு JCI கேலக்ஸி, சேலம்  ரிஷி நேத்ராலயா கண் மருத்துவமனை, ரிஷி அறக்கட்டளை சேலம், ஈரோடு மக்கள் மருத்துவமனை  இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

 இதில் சேலம் ரிஷி நேத்ராலயா  மருத்துவமனையின் Rtn.Dr.R.செல்வரங்கம் M.B.B.S.,D.O   தலைமையிலான கண் மருத்துவக் குழுவினர்  இங்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்தார்கள். இங்கு வரும் அனைவருக்கும்  சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்த முகாமை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து கொடுத்த  மதிப்பிற்குரிய J.C  ஷாஜகான்  அவர்களுக்கு பொதுமக்கள் நன்றியை  தெரிவித்துக் கொண்டார்கள்.

 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments