ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொமராபாளையம் ஊராட்சி, நஞ்சப்ப செட்டி புதூர் அரிஜன காலனியில் மயானம் அமைக்கும் பணி தொடர்பாக சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் , சத்தி தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் அவர்களை நேரில் அழைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இவர்களுடன் சத்தியமங்கலம், வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி டி.கே.ரமேஷ் குமார் , கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் எஸ். ரமேஷ் , கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (எ) பா.செந்தில்நாதன், ஒன்றிய துணை செயலாளர் டி. பி. அசோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471 .
No comments:
Post a Comment