நாகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட அலுவலகமான பி.ஆர்.ஆர் பவனில் கே.எஸ்.அழகிரியின் 72~வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்தராஜா தலைமையில் நடைப்பெற்றது.
பிறந்தநாள் கேக் வெட்டி பெண்களுக்கு புடவைகளும், மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கினார்.பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளர் ஏ.ஆர்.நௌஷாத் பங்கேற்று மரகன்றுகள் வழங்கினார்.
நாகை நகர காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவரும், கவுன்சிலருமான எஸ்.முகம்மது நத்தர்,மாவட்ட துணைத் தலைவர்கள் எம்.ஏ.எச்.காதர்,நாகூர் என்.ரபீக் எம்.ஜி.ஜலாலுதீன்,மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.தெய்வானை,நாகூர் நகரத் தலைவர் எஸ்.சர்புதீன் மரைக்காயர்,மாவட்ட அமைப்பு சாரா காங்கிரஸ் தலைவர் ஹெச்.ராஹீக் உசேன்,மாவட்ட இலக்கிய அணி தலைவர் முனைவர் தி.வேதரத்தினம்,கீழ்வேளூர் தெற்கு வட்டாரத் தலைவர் எஸ்.லியோ,திருமருகல் தெற்கு வட்டாரத் தலைவர் எஸ்.சுரேஷ்குமார்,வடக்கு வட்டாரத் துணை தலைவர் ப.ஜீவா,கீழையூர் வட்டார மூத்த துணைத் தலைவர் வீ.ஜி.பாலசுப்ரமணியம்,எஸ்.அணி துறை மாவட்டச் செயலாளர் வி.சந்திரன்,மாணவர் காங்கிரஸ் பிரசன்னா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
செய்தியாளர் க.சக்கரவர்த்தி நாகை மாவட்டத்திலிருந்து
புகைப்பட நிருபர் சுந்தரமூர்த்தி
No comments