நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்...... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்......
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
சமூகநீதி சமத்துவத்தின் நிலைநாட்ட சமமான உள்ளடக்கிய வளர்ச்சி உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
No comments