அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் வழங்கினார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் பணிகளை அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார். உடன் கோபி சரக பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் முத்து சிதம்பரம்,பொது விநியோகத் திட்ட சார்பதிவாளர் லலிதாமணி, அந்தியூர் பேரூர் கழக செயலாளர் எஸ் .கே.காளிதாஸ் ,அந்தியூர் பேரூராட்சி தலைவர் எம் .பாண்டியம்மாள் , அந்தியூர் பேரூராட்சி துணை தலைவர் ஏ.சி.பழனிச்சாமி மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments