தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

 


கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது. மேலும் அவர்களின் 5 விசைப்படகுகளின் வலைகளை வெட்டி சேதம் செய்துள்ளது.


அதனால் ஒரு விசைப்படகுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments