• Breaking News

    கொமாரபாளையம் ஊராட்சியில் ஜெ.ஜெயலலிதாவின் 76- ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா


    ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ,  கொமாரபாளையம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிளைக்கழகங்களிலும் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதாவின்  76-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன்  தலைமையில், சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய  செயலாளர் சி.என். மாரப்பன் அஇஅதிமுக கொடியேற்றி  அலங்கரிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதாவின்  திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தார்கள். உடன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பிரபாகரன், சிக்கரசம்பாளையம்  ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியா பழனிசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் நாகராஜ், வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் ராசு, துணைத் தலைவர் ரமேஷ், வார்டு உறுப்பினர் வடிவேலு,     சுகுமார், வசந்தி, ரங்கராஜ், வையாபுரி,சுந்தரம், கிருஷ்ணமூர்த்தி,கிளை கழக செயலாளர்கள்,யுவராஜ் வக்கீல் பழனிச்சாமி பெரிய முனியன் தங்கராஜ்,ராஜேந்திரன், மணி,செல்வராஜ், மூர்த்தி,கருப்பன்,மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள்,மகளிரணி நிர்வாகிகள், இளைஞரணீ நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments