சிறுபான்மையினர் உரிமைகள் தினம் நெல்லையில் கொண்டாடப்பட்டது
சிறுபான்மையினர் உரிமைகள் தினம் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவகாமசுந்திரி தலைமையில் நடைபெற்றது.
கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் செயலாளர் அருட்தந்தை.பிரான்சிஸ் சேவியர், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் செயலாளர் செய்யது அகம்மது. ஆயர் கிப்ஸன் ஜான் தாஸ், கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் உறுப்பினர் ஜெபசிங், முஸ்லிம் அனாதைகள் இல்லம் செயலாளர் முகம்மது ஷாபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் பேசியதாவது. அரசின் சார்பில் மகளிர் உதவும் சங்கத்திற்கு இணை மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் கிறித்த மகளிர் உதவும் சங்கம் மூலம் 20 லட்சம் ரூபாய் கிறித்தவ மதத்தை சேர்ந்த ஏழ்மை நிலையில் உள்ள முதியோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மற்றும் விதவைகள், கல்லூரியில் படிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவிகள் போன்ற பயனாளிகளுக்கும் மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 40 லட்சம் ரூபாய் ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகளுக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் உறுப்பினர் அட்டைகளை 8 பயனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்வில் பேசிய கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் உறுப்பினர் ஜெபசிங் இடையன்குடி கால்டுவெல் நினைவு இல்லம் புனரமைப்பு பணிக்கு 1 கோடி நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பெத்தேகோஸ்தே திருச்சபைகளை சார்ந்த மக்களுக்கு நெல்லை மாவட்டத்தில் கல்லறை தோட்டம் நிலம் வழங்க ஆவண செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் மாவட்ட அரசு காஜி முகம்மது கசாலி, கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் இணை செயலாளர் அருட்சகோதரி. செல்வி, கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் உறுப்பினர் குளோரிந்தாள், சுரேஷ் ஜெயபாண்டியன், மற்றும் சிறுபான்மை அலுவலக உதவியாளர் கலைவாணி, மாரிமுத்து, முருகன், உட்பட சிறுபான்மை மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் சிறுபான்மை நல அலுவலக கண்காணிப்பாளர் ஆனந்த குமார் நன்றி கூறினார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471 .
No comments