• Breaking News

    19-ம் தேதி வெளிவருகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

     

    நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன.இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தலை அறிக்கை வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின்  பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது ,காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நாளை மறுநாள் (மார்ச் 19) நடைபெறுவதாகவும், இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    No comments