கூட்டணி கட்சி தலைவர் புகைப்படம் புறக்கணிப்பு...... திருச்சி அமமுக வேட்பாளர் செந்தில்நாதனின் சிறுபிள்ளைத் தனம் - பாமுக தலைவர் பாரதராஜா யாதவ் சுளீர்


யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மாபெரும் யாதவ சமுதாயத்தின் தலைவர்களில் ஒருவர் திரு.தேவநாதன் யாதவ்.இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரான திரு தேவநாதன் யாதவ் அவர்கள் பாரதிய ஜனதா  கூட்டணியில் அங்கம் வகித்து சிவகங்கை வேட்பாளராக போட்டியிடுகின்றார்.அனைத்து சமுதாய மக்கள் மட்டுமின்றி அவர்தம் தலைவர்களையும் மிகவும் மதிக்க கூடியவர் திரு.தேவ நாதன் யாதவ்.கூட்டணியில் அங்கம் வகிக்க கூடிய அனைத்து தலைவர்களின் படங்களையும் துண்டு பிரசுரங்களில் வெளியிடுவதோடு கூட்டணி கட்சியினர் சார்ந்த கொடிகளை கார்களிலும் தெருக்களிலும் கட்டி வாக்கு சேகரிப்பதுதான் கூட்டணி தர்மம்.பா.ஜ,தலைமையிலான கூட்டணியின் 39 வேட்பாளர்ளும்  கூட்டணி கட்சி தலைவரான திரு.தேவநாதன் யாதவ் படத்தினை துண்டு பிரசுரங்களில்  வெளியிட்டு யாதவ சமுதாய மக்களின் ஆதரவுகளை திரட்டி வருகின்றனர்.ஆனால் திருச்சி பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர்  திரு செந்தில் நாதன் மட்டும் தமது துண்டு பிரசுரத்தில்  திரு.தேவநாதன் யாதவ்  படத்தினை புறக்கணித்துள்ளார்.

பாரதராஜா யாதவ்

இது அமமுக வேட்பாளர் திரு.செந்தில் நாதனின் சிறுபிள்ளைத்தனத்தினையே காட்டுகின்றது.கூட்டணியை மதிக்காத அமமுக வேட்பாளரின் செயலால் யாதவ மக்களின் வாக்குகளை இந்த திரு.செந்தில்நாதன் நிச்சயமாக இழக்க நேரிடும் .கூட்டணி கட்சி தலைவருக்கான மரியாதையை அனைவரும் கொடுத்தே ஆக வேண்டும்.அதற்கு வேட்பாளர் திரு.செந்தில் நாதன் முன் வர வேண்டும்.

தேவநாதன் யாதவ்

திரு.தேவநாதன் யாதவ் எந்த கூட்டணியில் இருந்தாலும் அவர் எம் சமுதாய மக்களின் தலைவர்களில் ஒருவராவார் அவரை இழிவு படுத்துவதை எக்காலத்திலும் ஏற்க இயலாது. என தெறிவித்துள்ளார்.


இணைப்பு ;

பா.ம.க வேட்பாளர் கூட்ட பேனர்

திருச்சி அமமுக வேட்பாளரின் துண்டு பிரசுரம்

Post a Comment

0 Comments