புதுக்கோட்டை: கோபாலப்பட்டினம் கொலை வழக்கு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மீமிசல் கோபாலப்பட்டினத்தில் கடந்த 22 ஆம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்ட நெய்னா முகமதுவின் குடும்பத்தாரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமையில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

இந்த படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை. மேலும் மீமிசல் காவல் நிலையத்திற்கு சென்று, இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்திட வேண்டும் எனவும், அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். படுகொலை செய்த குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதியளித்ததாகவும் மேலும் காவல்துறையின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் கூறிய அவர் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில், இஸ்லாமிய இளைஞர்களை குறி வைத்து கஞ்சா போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதையும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 

கொலை செய்யப்பட்ட நைனா முகமது


இந்த சந்திப்பின்போது மாவட்டச் செயலாளர் முகமது மீரான், மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது மீரா, மாவட்டத் துணைச் செயலாளர் குலாம் முஹம்மது பாட்ஷா மற்றும் ஜமாஅத்தின் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோன்று தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் முகமது மீரான், தமுமுக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சேக்தாவுதீன், மாநிலச் செயலாளர் சாதிக் பாட்ஷா, தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர், மனிதநேய ஜனநாயக கட்சியின் மனித உரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி, எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் செய்யது அகமது உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments