• Breaking News

    சிவகங்கை அருகே நள்ளிரவில் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி.... எச்சரிக்கை மணியால் தப்பியது சுமார் 4 கிலோ தங்க நகைகள்.....


    சிவகங்கை அருகே உள்ள கீழக்கண்டனையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து வேளாண் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுவதுடன், நெல் கொள்முதல் நிலையமும் செயல்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு தங்க நகைகள் ஈட்டின் பேரில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

     இந்நிலையில் நேற்று இரவு வேளாண் கூட்டுறவு வங்கி கட்டிடத்தில் மர்ம நபர்கள் சிசிடிவி கேமராக்களை துண்டித்தும் கதவினை உடைக்கும் முயற்சித்த போது எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.  இதுகுறித்து எச்சரிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்றதை அடுத்து விரைந்து வந்த கூட்டுறவுச் செயலாளர் வந்து பார்த்தபோது கொள்ளை முயற்சி தெரியவந்தது.

     இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையின் தடையவியல் நிபுணர்களின் உதவியுடன் தப்பிச்சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்தக் கொள்ளை முயற்சி சம்பவத்தில் அலுவலகத்தில் இருந்த சுமார் 4 கிலோ தங்க நகைகள் தப்பியது குறிப்பிடத்தக்கது.

    No comments