• Breaking News

    காட்டுப்புத்தூர் காந்தி நகர் காலனி மாரியம்மன் திருவிழா


    தொட்டியம் ஒன்றியம் காட்டுப்புத்தூர் காந்தி நகர் காலனி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழா காப்பு கட்டுடன் தொடங்கியது. அம்மன் கரகம் பாலித்து முக்கிய வீதிகள் வழியாக புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. நேற்று பக்தர்கள் காவிரிக்கு சென்று தீர்த்தக்குடம் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பூஜை செய்தனர். மேலும் பொங்கல் வைத்தும் மாவிளக்கு படைத்தும் தங்களது நேர்த்திக்கடனை  நிறைவு செய்தனர். பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் அழகு குத்தியும் ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும் விழா குழுவினரும் செய்து வருகின்றனர். 

    பட விளக்கம்: தொட்டியம் ஒன்றியம் காட்டுப்புத்தூர் காந்தி நகர் காலனி ஸ்ரீ மகா மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    No comments