தேனி மாவட்டம் கம்பம் பெரியார் அணை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு முல்லைப் பெரியாறு அணையின் துணை அணையான பேபி அணையை பலப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திட அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் நில வணிக நலச்சங்கத்துடன் இணைந்து பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பும் போராட்டத்தின் நடைபெற்றது.
அந்த தபாலில் தென் மாவட்டங்களில் உள்ள தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் ஒரு கோடி மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கக்கூடிய அணையை கேரளா அரசு அரசியல் உள்நோக்கத்திற்காக தொடர்ந்து அவதூறுகளை பரப்புவதும், மேலும் கேரளா அரசு முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறுகளை பரப்புவது வேதனை அளிப்பதாகவும், இரு மாநில மக்களின் நல்லுறவை குலைக்கின்ற செயலாக மட்டுமின்றி இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்பாடாக கருதுவதாகவும் கூறி உடனடியாக தாங்கள் இதற்கு நிரந்தர தீர்வாக 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்பட்ட தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு தமிழக பொதுப்பணி துறையின் மூலமாக முல்லைப் பெரியாறு அணையின் துணை அணையான பேபி அணையை பலப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திட அரசாணையை வழங்கிட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக கூறி பொதுமக்களிடமும், முக்கிய சங்க நிர்வாகிகளிடமும் பிரதமருக்கு தபால் அனுப்புவதற்காக கையெழுத்து மற்றும் ஆதார் எண்களை பதிவு செய்யும் நிகழ்வினை தொடங்கினார்கள்.
மேலும் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி ஐந்து லட்சம் கடிதங்களை அனுப்ப பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்தனர்.
முதலாம் நாள் ஜான் பென்னிகுக் மணி மண்டபத்திலும், இரண்டாம் நாள் பெரியார் அணை செயற்பொழிவாளர் அலுவலகத்திலும் இந்த கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றுள்ளது.மேலும் இந்த நிகழ்ச்சியில் ஐந்து மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள். நில வணிக நலச் சங்கம் நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment