• Breaking News

    கும்மிடிப்பூண்டி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில், பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சான்றிதழ் வழங்கினார்


    கும்மிடிப்பூண்டி வட்டத் தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கடந்த ஜூன் 7.ம் தேதி துவங்கிய ஜமாபந்தி 8 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், பொதுமக்க ளிடம் இருந்து பெறப்பட்ட 757.மனுக்களில் 106.மனுக் களுக்கு நேற்று தீர்வு காணப்பட்டது. பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்  பிரபுசங்கர் சான்றிதழ் வழங்கினார்.இதில் வட்டாட்சியர் பிரீத்தி, பி.டி.ஒ சந்திரசேகர், மண் டலதுணை வட்டாட்சியர் ரதி, முன்னிலை வகித்தனர். 

     

    இந்த நிகழ்வில் கிராம பொதுமக்கள் கிராமநிர்வாக அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவரையும்  வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி நன்றி கூறினார்.



    No comments