மயிலாடுதுறையில் அனஸ் பிரியாணி கடையின் புதிய கிளை திறப்பு விழா, ஆர்வத்துடன் பிரியாணி வாங்கிச் சென்ற பொது மக்கள்
தமிழ்நாட்டில் புகழ் பெற்ற பிரியாணி கடைகளில் ஒன்றான அனஸ் வெட்டிங் பிரியாணி அண்ட் கேட்டரிங் சர்வீஸ் சார்பில் புதிய கிளை திறப்பு விழா மயிலாடுதுறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை நாராயண பிள்ளை சந்தில் புதிய கிளையை சென்னையைச் சேர்ந்த பிளாக் துலிப் பிளவர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் எம் முகமது எஹியா திறந்து வைத்தார். நீடூர் அரபிக் கல்லூரி முதல்வர் ஏ முகமது இஸ்மாயில் சிறப்பு துவா செய்து வைத்தார்.
அனஸ் ரியல் எஸ்டேட் நிறுவனர் எம் ஜபீர் முகமது முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வணிகர் சங்க பேரமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் எ தமிழ்ச்செல்வன், வணிகர் சங்க பேரவையின் மாவட்ட தலைவர் எம் என் ரவிச்சந்திரன்,சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஏ ஆர் எஸ் மதியழகன் உள்ளிட்ட நகர முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.கடையின் உரிமையாளர் ஏ சிக்கந்தர் பாட்ஷா நிகழ்ச்சியில் நன்றி கூறினார்.
No comments