• Breaking News

    'சண்டாளன்' வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி - சீமான்

     

    சண்டாளன் என்ற வார்த்தையை கிராமங்களில் இயல்பாக பயன்படுத்தப்படும் வார்த்தை என நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியார்களை சந்தித்து பேசிய அவர்,  சண்டாளன் எனும் வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி. சண்டாளன் என்று ஒரு சமூகம் இருப்பது எனக்கு தெரியாது.வழக்கு மொழியாக தான் அப்படி பேசினேன். கந்தசஷ்டி கவசத்தில் கூட சண்டாளர்கள் என்ற  வார்த்தை இடம்பெற்றுள்ளது. அதிமுக மேடைகளில் கருணாநிதியின் பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்ட போது திமுகவினர் எங்கே சென்றார்கள்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    No comments