• Breaking News

    செங்கல்பட்டு: முடிச்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயலும் மாணவர்களுக்கு அதிமுக சார்பில் நோட்டு புத்தகம், எழுது பொருட்கள் வழங்கப்பட்டது


    அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் ஆலோசனைப்படி முடிச்சூர் ஊராட்சி அதிமுக சார்பில் அன்னை இந்திரா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவ மாணவியருககு முடிச்சூர் ஊராட்சி அதிமுக நிர்வாகி ஸ்ரீபாஸ்கர் ஏற்பாட்டில் நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், ஜாமன்றி பாக்ஸ், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இதில் பரங்கிமலை ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.பி.மனோகரன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், ஜாமன்றி பாக்ஸ், இனிப்புகள் வழங்கினார். அப்போது கணேசன், வெங்கடராமன், தவமணி, ராஜா, மூர்த்தி, சரவனண், ஆதிகேசவன், தாஸ், விஜய் கணேசன், சிவ, பாலாஜி, குரங்கு பாபு, மூர்த்தி, கர்பகம், நித்யா, மஞ்சு, தீபா, காயத்திரி உள்ளி அதிமுகவினர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயாபாரதி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    No comments