திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மதுர மேட்டுபாளையம் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஸ்ரீ மங்காவரத்தம்மன் முனீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
10 நாட்கள் நடைபெற்ற உற்சவங்களில் அம்மன் நாள்தோறும் வாண வேடிக்கைகளுடன் வீதி உலா வந்து 53 அடி கொண்ட மங்காவரத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற வந்தது.
அதனை தொடர்ந்து 10-ஆம் நாளான இன்று அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.அதனை தொடர்ந்து 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் பொன்னேரி ,கும்மிடிப்பூண்டியை சேரந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.


0 Comments