பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி


 பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய தளம் தலைவருமான லாலு பிரசாந்த் யாதவ் உடல் நல குறைவு காரணமாக டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பிய நிலையில் நேற்று திடீரென்று அவருடைய உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.உடல்நிலை மோசம் அடைந்ததால் மருத்துவமனையில் உடனே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நிலை பற்றி இன்று அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments