• Breaking News

    மயிலாடுதுறை: சுற்றுச்சூழலை போற்றுவோம் என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி.... சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு


    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பசுமை நேச கரங்கள் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சேர்ந்து புவி வெப்பமடைவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கும் வகையில் சுற்றுச்சூழலை போற்றும் கட்டுரை போட்டி நடத்தியது. 

    இதில் பங்கேற்ற மாணவ மாணவிகள் புவி வெப்பமடைவதன் காரணமாக நிலையற்ற கால சூழல் நிலவுவதால் திடீர் மழை திடீர் வறட்சி திடீர் வெப்பம் காற்று ஆகியவை உண்டாவது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளும் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்ச்சி இன்று வள்ளலாகரம் ஊராட்சியில் நடைபெற்றது.

     அறக்கட்டளை தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பங்கேற்று பரிசுகளை வழங்கினார் ஏராளமான மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    No comments